×

பைக் மோதி 2 பேர் படுகாயம்

குளச்சல், மே 8: குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவதாணு(61). இவரது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சிவதாணுவும், அவரது நண்பர் பாலப்பள்ளத்தை சேர்ந்த செல்வராஜ்(63) என்பவரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கில் சென்றனர். வெள்ளமோடியில் செல்லும் போது, பெரியவிளையை சேர்ந்த ஆஸ்டின் விவேக்(30) என்பவர் ஓட்டி வந்த பைக், சிவதாணு, செல்வராஜ் சென்ற பைக் மீது மோதியது. இதில் சிவதாணு, ெசல்வராஜ் காயம் அடைந்தனர். சிவதாணு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் ஆஸ்டின் விவேக் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post பைக் மோதி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Sivathanu ,Kurundankodu ,Selvaraj ,Balapallam ,
× RELATED குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்